பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு! குழந்தைகள் உட்பட 3 பேர் பலியான சோகம்
பாகிஸ்தானில் லாகூரில் அனார்கலி என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அனார்கலி பஜார் என்ற வணிகநகரமான லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியை ஒட்டி நடந்த இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 22 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.