தலிபான்களை குறிவைத்து பயங்கர வெடிகுண்டு தாக்குதல்! ஆப்கானில் தொடரும் ஐ.எஸ். அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் தலிபான் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஆக்ஸ்ட் 31ம் திகதியோடு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறிய நாள் முதல் Nangarhar மாகாணத்தில் தலிபான்களை குறிவைத்து ஐஎஸ்-கே தொடர் தாக்தலை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை Nangarhar மாகாண தலைநகர் ஜலாலாபாத்தில் Siraj-ul-Emarat garden அருகே தலிபான் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்டப்டுள்ளது.
இதில் தலிபான் போராளி ஒருவர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் 3 தலிபான் போராளிகள், பொதுமக்கள் 3 பேர் மற்றும் நகராட்சி அதிகாரி ஒருவர் என 7 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 7 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
په ننګرهار کې چاودنې اته کسانو ته مرګ و ژوبله اړولې
— Ariana News (@ArianaNews_) September 25, 2021
د ننګرهار د حوزوي روغتون سرچينې وايي، د پېښې له ځاىه روغتون ته د يوه سرتېري مړى او " اووه " ټپيان رالېږدول شوي، چې په ټپيانو کې درې سرتېري، درې ملکي وګړي او يو د ښاروالۍ کارکوونکى شامل دي. pic.twitter.com/xpik9gOLbT
Nangarhar மாகாணத்தில் தொடர்ந்து ஐ.எஸ்-கே தாக்குதல் நடத்தி வருவதால், ஆட்சி அதிகாரித்தில் இருக்கும் தலிபான் அம்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, வீடு வீடாக சென்று சோதனை செய்து மறைந்திருக்கும் ஐ.எஸ்-கே பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒழிக்க வேண்டும் என ஆப்கானியர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.