பாகிஸ்தானில் மாணவர் பிரிவினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு! 4 பேர் பலி - 15 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் அரசுக்கல்லூரி எதிரே நேற்றிரவு நடத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் 4 பேர் பலியடைந்துள்ளதாகவும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜமியத் உலமா இ-இஸ்லாம் கட்சியின் மாணவர் பிரிவினர் நடத்திய பொதுக்கூட்டத்தை குறிவைத்தே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன.
இச்சம்பவம் குறித்து பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள அரசு கல்லூரியின் மைதான நுழைவுவாயில் அருகே இருந்த கம்பத்தின் அடியில் ஐஇடி வகை வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் கலைந்து செல்ல தொடங்கிய சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்கதாகும்.