ஆசனவாயில் வெடிகுண்டுடன் மருத்துவமனைக்கு வந்த பிரித்தானியரால் பரபரப்பு
இங்கிலாந்திலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு, ஆசனவாயில் வெடிகுண்டுடன் பிரித்தானியர் ஒருவர் வந்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Gloucestershireஇல் வாழும் ஒருவர், தன் வீட்டில் இராணுவம் தொடர்பான பொருட்களை சேகரித்துவைத்திருக்கிறார்.
அந்த பொருட்கள் இருக்கும் அறையில் அவர் தவறி விழுந்தபோது, இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்றின் மீது அவர் விழ, அது அவரது ஆசனவாய்க்குள் நுழைந்துள்ளது.
உடனடியாக அவர் Gloucestershire ராயல் மருத்துவமனைக்கு விரைய, விடயமறிந்த மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் நோயாளியைப் பார்த்துவிட்டு இராணுவத்தின் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைக்க, ஒரே களேபரமாகிவிட்டிருக்கிறது.
ஆனால், வெடிகுண்டு நிபுணர்கள் வருவதற்குள்ளேயே, மருத்துவர்கள் அந்த வெடிகுண்டை லாவகமாக வெளியே எடுத்துவிட்டார்கள்.
நல்ல வேளையாக அது ஒரு வெற்று குண்டு, அதாவது வெடிக்காத குண்டாக இருந்ததால், பின்விளைவுகள் பெரிதாக இல்லை!
தற்போது அவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டாராம்...