பிறந்தநாளன்று குற்றுயிராக மீட்கப்பட்ட இளம்பெண்... நடுங்க வைத்த சம்பவத்தின் பின்னணி
உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலை அடுத்து, இளம் பெண் ஒருவர் அவரது 19வது பிறந்தநாளில் குற்றுயிராக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40க்கும் அதிகமானோர் பலி
படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ள அவர், ஒரு கண்ணின் பார்வையை மொத்தமாக இழந்துள்ளார். 40க்கும் அதிகமானோர் பலியான இந்த ஏவுகணை தாக்குதலில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்டவர்களில் Anna Kotova என்பவரும் ஒருவர்.
@e2w
சனிக்கிழமை ரஷ்ய துருப்புகளால் முன்னெடுக்கப்பட்ட கொடூர தாக்குதலில் பல குடியிருப்பு வளாகங்கள் தரைமட்டமாகின. Dnipro பகுதியில் பட்டிட இடிபாடுகளில் இருந்து சனிக்கிழமை Anna Kotova மீட்கப்படும் போது, அவருக்கு அன்று 19வது பிறந்தநாள்.
கண்ணில் காயம்பட்டு, குற்றுயிராக மீட்கப்பட்ட அவரை சிறப்பு சிகிச்சைக்காக போலந்துக்கு அனுப்பும் திட்டத்துடன் அவரது நண்பர்கள் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இந்த போரில், ஒரே ஒரு ஏவுகணை தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பல பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
@getty
அன்னாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானாலும், அவர் பிழைப்பார் என்றே அவரது நண்பர்களும் உறவினர்களும் கூறுகின்றனர். மேலும், இன்னொரு கண்ணையும் பாதிப்பின்றி காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சிகிச்சைக்காக போலந்துக்கு
ஒரு கண் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், காயங்கள் ஆறிய பின்னர், இன்னொரு கண்ணுக்கான சிகிச்சையை முன்னெடுக்க உள்ளனர். உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அன்னா Dnipro பகுதியில் குடியேறியதாக கூறுகின்றனர்.
ஆனால், ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் சிக்கி, அன்னா படுகாயமடைந்துள்ளார். சிறப்பு சிகிச்சைக்காக போலந்துக்கு அனுப்பி வைக்க அவரது நண்பர்கள் தற்போது நிதி திரட்டி வருகின்றனர்.
@e2w
கடந்த ஆண்டில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற அன்னா, Dnipro பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
Dnipro பகுதியில் உள்ள மருத்துவமனையில் அன்னா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என லுஹான்ஸ்க் பிராந்திய தலைவர் தெரிவித்துள்ளார்.