தடை... பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் பிரித்தானியாவின் ‘விரோத" நிலைப்பாடு காரணமாக, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ், முன்னாள் பிரதமர் தெரசா மே மற்றும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் உட்பட 13 பிரித்தானியா அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர்க்கப்பல் மூழ்கியதற்கு தொடரும் பதிலடி.. பயங்கர ஆயுதங்களால் உக்ரைனை அழித்தொழிக்கும் ரஷ்யா!
பிரித்தானியா அரசாங்கத்தின் எதிர்பாராத விரோத நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, குறிப்பாக மூத்த ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்த பொருளாதாரத் தடைகளே இதற்கு முக்கிய காரணம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், இந்த பட்டியல் விரைவில் விரிவுபடுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் எந்தவித முன்னறிவிப்பின்றி, உக்ரைன தலைநகர் கீவ்க்கு சென்று ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.