பிரித்தானிய மகாராணியை தொலைபேசியில் அழைத்த போரிஸ் ஜான்சன்: நேரில் சென்று சந்திக்காதது ஏன்?
பிரித்தானிய மகாராணியாரை இன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போரிஸ் ஜான்சன், தான் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக மகாராணியாரிடம் தெரிவித்தார்.
இன்று காலை போரிஸ் ஜான்சன் மகாராணியாரை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அவர் பதவியிலிருந்து வெளியேறும் வரை, அவர் மகாராணியாரை நேரடியாக சென்று சந்திக்கத் தேவையில்லை என்பதால், தொலைபேசி வாயிலாக அவர் மகாராணியாரிடம் தான் ராஜினாமா செய்ய இருப்பது குறித்து தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜான்சன் அக்டோபர் மாதம் வரை பிரதமர் பொறுப்பில் நீடிப்பார் என கருதப்படுகிறது. அதற்குப் பின் தேர்ந்தெடுக்கப்படும் புதிய பிரதமரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு அவர் பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேறுவார்.
ஆனால், அவர் உடனடியாக வெளியேறவேண்டும் என அவரது கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்களாம்.
துணை பிரதமரான Dominic Raabஇடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, உடனடியாக போரிஸ் ஜான்சன் வெளியேறவேண்டும் என்றும், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை Dominic Raab பிரதமர் பொறுப்பை கவனித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்களாம்.