பிரித்தானியாவில் Omicron வைரஸ் கண்டுபிடிப்பு! ஊரடங்கு வருமா? போரிஸ் ஜோன்சன் விளக்கம்
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
இதையடுத்து அப்பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
WATCH LIVE: An update on COVID-19 (27 November 2021) https://t.co/t5ABqqVQVF
— Boris Johnson (@BorisJohnson) November 27, 2021
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன், பிரதமர் அலுவலகத்தில் சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
அதில், இந்த Omicron வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இரண்டு தடுப்பூசி போட்டவர்களும், இந்த புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்று கூறினார்,
மேலும், அவரிடம் இந்த புதிய வகை மாறுபாடு கொரோனா வைரஸால், கிறிஸ்துமஸ் திட்டங்களை மறுசீரமைக்க வேண்டுமா? என்று கேட்டதற்கு, நிச்சயமாக கடந்த கிறிஸ்துமஸை விட, இந்த கிறிஸ்துமஸ் முற்றிலும் சிறப்பாக இருக்கும்.
நம்பிக்கையுடன் இருங்கள் என்று பதில் அளித்தார். இதன் மூலம் மீண்டும் ஊரடங்கு மீண்டும் வராது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மேலும், கடைகளிலும் பொதுப் போக்குவரத்திலும் முகக் கவசம் அணிவது தொடர்பான விதிகள் கடுமையாக்கப்படும் என்று தெரிவித்தார்.