அதனை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்: போரிஸ் ஜான்சன் வெளியிட்ட பதிவு
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், சமூக வலைத்தள பக்கத்தில் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள்.
சமீபத்தில் குஜராத் மற்றும் புது தில்லிக்கு நான் சென்றிருந்தபோது, நம் நாடுகளுக்கு இடையே செழித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பாலத்தை நானே பார்த்தேன்.
அடுத்த 75 ஆண்டுகளில் இந்த பிணைப்புகள் வலிமையிலிருந்து வலுப்பெறுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Congratulations to the people of India on 75 years of independence.
— Boris Johnson (@BorisJohnson) August 15, 2022
During my recent visit to Gujarat and New Delhi I saw for myself the thriving Living Bridge between our countries. I look forward to seeing these bonds go from strength to strength in the next 75 years. pic.twitter.com/4G3RcUBUsS