போருக்கு மத்தியில் உக்ரைனுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்
உக்ரைனுக்கு பிரித்தானியாவின் ஆதரவைத் தெரிவிப்பதற்காக, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், போருக்கு மத்தியில் உக்ரைன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர்ச் சூழலில் உக்ரைனுக்குச் சென்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்திப்பது நடைமுறையில் சாத்தியமா, அதனால் பலன் கிடைக்குமா என்பது குறித்து ஆராயுமாறு போரிஸ் ஜான்சன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், போர் நடக்கும் இடத்துக்கு பிரதமர் செல்ல திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்துள்ளார்கள்.
இருந்தாலும், உக்ரைனுக்கு செல்வது சாத்தியமானால், போரிஸ் ஜான்சன் அங்கு செல்லவே விரும்புவதாக நாடாளுமன்ற அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குறித்த விடயங்கள் முக்கியம் என்பதை மறுப்பதற்கில்லை, என்றாலும், அவை ஒருபுறம் இருக்க, இப்போது உக்ரைனுக்குச் சென்று அதன் ஜனாதிபதியை சந்திப்பதால் ஏதாவது கூடுதல் பலன் உண்டா, அல்லது, வெறுமனே உக்ரைனுக்கு நமது ஆதரவைத் தெரிவிப்பதற்காகத்தால் இந்த பயணமா, அல்லது இந்த பயணத்துக்கு போதுமான காரணம் உள்ளதா என்பது சிந்திக்கவேண்டிய ஒரு விடயம் என்கிறார் அவர்.
அவர் சொல்வதை ஆமோதிப்பது போலவே உள்ளது, உக்ரைன் தலைநகர் Kyiv மேயரான Vitali Klitschko பகிர்ந்துள்ள காட்சிகள்!
முந்தைய நாள் இரவில் Kyiv நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வெளியாகியுள்ள வீடியோ ஆதாரம் ஆகியவற்றைப் பார்க்கும்போது, இப்போதைய சூழலில் போரிஸ் ஜான்சன் உக்ரைன் சென்றால், அவரது பாதுகாப்பை உறுதி செய்வது எவ்வளவு கடினம் என்பதை காட்டும் விதத்தில் அவை அமைந்துள்ளதைக் காணலாம்.