இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றில் மிகவும் ஆபத்தானது: எச்சரிக்கும் நிபுணர்கள்
தென்னாபிரிக்காவின் பொஸ்வானா நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடு தான், உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் ஆபத்தானது என பிரித்தானிய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை 10 பேர்களில் பொஸ்வானா மாறுபாடு உறுதி செய்யப்பட்ட நிலையில், மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாடை விடவும் இது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பொஸ்வானா நாட்டில் B:1.1.529 என்ற 32 தரம் உருமாறிய மிக மிக ஆபத்தான மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தடுப்பூசிகளை பலவீனப்படுத்தும் என்பதுடன் மிக விரைவில் பரவும் தன்மை கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல உலக நாடுகள் பொஸ்வானா நாட்டை சிவப்பு பட்டியலில் சேர்க்க உள்ளது.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலம் என்பதனால் பலர் சுற்றுலா செல்ல முற்பட்டுள்ளார்கள். இதனால் மேலும் கடுமையாக இந்த கொரோனா பரவ வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக குளிர் காலத்தில் தான் இந்த வகையான வைரஸ் கடுமையாக பரவுகிறது.
இந்த பொஸ்வான மாறுபாடு 32 மடங்கு வீரியம் மிக்கது என்கிறார்கள். பொஸ்வானாவில் இதுவரை 3 பேரும், தென்னாப்பிரிக்காவில் ஆறு பேரும் குறித்த தொர்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹொங்ஹொங்கிலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிரித்தானியாவில் இதுவரை எவருக்கும் உறுதி செய்யப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.