ஜேர்மனியில் ஒரு வில் அம்பு தாக்குதல்: பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில், ஒருவர் வில் அம்பினால் தாக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வில் அம்பினால் தாக்கிய நபர்
வடக்கு ஜேர்மனியிலுள்ள Peine என்னும் ரயில் நிலையத்தில், 22 வயது இளைஞர் ஒருவர் வில் அம்பினால் தாக்கப்பட்டார்.
Image: Ralph Peters/imago images
விரைந்து செயல்பட்டு தாக்குதல் நிகழ்த்திய நபரை பிடித்த பொலிசாரால் மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. பிடிபட்ட நபர் 29 வயதுடையவர். அவரிடம் பெரிய கத்தி ஒன்றும் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
பிடிபட்ட நபர் மன நல பாதிப்பு உள்ளவர் என பொலிசார் தெரிவித்தாலும், அவரது உடை மற்றும் தோற்றம் ஆகியவை அவர் வலதுசாரி அமைப்பு எதனுடனாவது தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Image: McPHOTO/Imago
காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |