பிரித்தானியாவில் குழந்தைகள் கண்முன் துடிதுடிக்க இறந்த 12 வயது சிறுவன்! புகைப்படம் மற்றும் பெயர் விவரங்களை வெளியிட்ட பொலிஸ்
பிரித்தானியாவில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது ஏற்பட்ட விபத்தில் பல குழந்தைகள் முன்னிலையில் கொடூரமாக உயிரிழந்த சிறுவனின் புகைப்படம் பற்றும் பெயர் விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் ஸ்டாஃபோர்ட்ஷையர் கவுன்டியில் உள்ள டாம்வொர்த் பகுதியில், A5 சாலையில் உள்ள ஸ்னோடோம் (SnowDome) உட்புற பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த West Midlands ஆம்புலன்ஸ் சேவை மற்றும் Staffordshire பொலிஸார், அங்கே பனிச்சறுக்கிலிருந்து தவறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி, இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 12 வயது சிறுவனை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால், சிறுவன் சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இதில் கொடும் என்னவென்றால், சிறுவன் துடுதுடித்தது இறந்ததை அங்கிருந்த மற்ற குழந்தைகள் பார்க்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்டாஃபோர்ட்ஷயர் காவல்துறையினர் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாகிகளுடன் சேர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த சிறுவனின் புகைப்படம் மற்றும் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், உயிரிழந்த சிறுவன் மேற்கு மிட்லாண்ட்ஸின் சுட்டன் கோல்ட்ஃபீல்டைச் சேர்ந்த லூயிஸ் வாட்கிஸ் (Louis Watkiss) என்றும் லூயிஸின் குடும்பத்தாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட அதிகாரிகள் ஆதரவு அளித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.