பிரித்தானியாவில் குழந்தைகள் கண்முன்னே 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! பனிச்சறுக்கு விளையாட்டின்போது நடந்த பயங்கர சம்பவம்
பிரித்தானியாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்ட விபத்துக்கு உள்ளாகி 12 வயது சிறுவன் மற்ற குழந்தைகள் முன்னிலையில் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் ஸ்டாஃபோர்ட்ஷையர் கவுன்டியில் உள்ள டாம்வொர்த் பகுதியில், A5 சாலையில் உள்ளது ஸ்னோடோம் (SnowDome) உட்புற பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கம்.
அந்த அரங்கத்திலிருந்து, வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் West Midlands ஆம்புலன்ஸ் சேவை மற்றும் Staffordshire பொலிஸாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.
அவர்கள் சில நிமிடங்களில் அங்கு விரைந்த போது, அங்கே 12 வயது சிறுவன் பனிச்சறுக்கிலிருந்து தவறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி, உடல்முழுவதும் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
துணைமருத்துவர்கள் சிறுவனுக்கு சிபிஆர் உட்பட பல முதலுதவிகள் கொடுக்கப்பட்டபோதும், சிறிது நேரத்தில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதில், மேலும் கொடுமை என்னவென்றால், அந்த சிறுவனுக்கு பின்னால் பனிச்சறுக்கில் வரிசையாக நிண்றுகொண்டு இருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் இந்த சிறுவன் அடிப்பட்டு, உயிருக்கு போராடியதை பார்க்கவேண்டிய கண்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்த விபத்தில், மேலும் ஒரு ஆண் படுகாயமடைந்தார், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த விபத்து தொடர்பாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாகிக்கு (HSE) தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஸ்னோடோம் பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கம் ஞாயிற்றுக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடபார்பான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எதையும் சமூக வலைத்தளங்களில் பகிரவேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.