ஐரிஸ் மலை குன்றுகளில் தவறி விழுந்த 12 வயது சிறுவன்: விபத்து நடந்த விவரம்!
மோஹர் குன்றுகளில் தவறி விழுந்து 12 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலை குன்றிலிருந்து தவறி விழுந்த சிறுவன்
கடந்த ஆண்டு ஜூலை 23 அன்று அயர்லாந்தின் மோஹர் குன்றுகளில் (Cliffs of Moher) ஏற்பட்ட விபத்தில் 12 வயது சிறுவன் ஜிகான் ஜாவோ (Zhihan Zhao) உயிரிழந்த சம்பவம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
விளிம்பிற்கு அருகில் இருந்த ஒரு குட்டையில் கால் தவறியதால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது.
என்ன நடந்தது? ஜிகான் ஜாவோவும் அவரது தாயார் சியான்ஹாங் ஹுவாங் (Xianhong Huang) மற்றும் அவர்களது நண்பர்கள் கவுண்டி கிளாரின் கடற்கரையில் உள்ள அந்த அழகிய சுற்றுலாத் தலத்திற்கு சென்றிருந்தனர்.
அப்போது ஜிகான் குழுவை விட்டு முன்னே நடந்து சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மரண விசாரணை அதிகாரி, ஜிகானின் கலங்கிய தாயாரை சந்தித்து, இது ஒரு தற்செயலான மரணம் என பதிவு செய்தார்.
ஜிகானும் அவரது தாயாரும் இந்த துயர சம்பவம் நடப்பதற்கு 12 நாட்களுக்கு முன்புதான் அயர்லாந்துக்கு வந்திருந்தனர்.
குன்றுகளின் நடைபாதையில் ஜிகான் தனக்கு முன்னால் நடந்து சென்றதாகவும், ஒரு கட்டத்தில் அவரைத் தான் பார்க்க முடியவில்லை என்றும் ஹுவாங் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |