சடலத்தை அப்புறப்படுத்த இன்ஸ்டாகிராமில் உதவி கேட்ட சிறுவன்! அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் 16 வயது சிறுவன் சிறுமி ஒருவரைக் கொன்றுவிட்டு, உடலை அப்புறப்படுத்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை நாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.
வீடியோ அழைப்பு
16 வயது சிறுவனிடம் தனது மகளுக்கு வீடியோ அழைப்பு வந்ததாகக் கூறிய பெண் ஒருவர் பொலிஸாருக்கு போன் செய்துள்ளார்.
அந்த அழைப்பில், ஜோசுவா கூப்பர் என்ற சிறுவன், ஒருவரைக் கொன்றதாகக் கூறி, வீடியோவில் பெண் ஒருவரின் கால்கள் மற்றும் பாதங்கள் இரத்தத்தில் மூழ்கியிருப்பதைக் காட்டி, இந்த உடலை எப்படி அப்புறப்படுத்துவது என உதவி கேட்டதாக, அப்பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
CNN
பொலிஸார் விசாரணை செய்து, பென்சலேமில் உள்ள டாப் ஆஃப் ரிட்ஜ் டிரெய்லர் பார்க் பகுதியில் கூப்பர் வசிப்பதாக அறிந்த பிறகு, சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் அங்கு சென்றபோது, அங்கிருந்த ட்ரெய்லர் வீட்டிலிருந்து ஒரு சிறுவன் தப்பி ஓடுவதைக் கண்டனர்.
சிறுமி கொலை
பின்னர் அதிகாரிகள் நடமாடும் ட்ரெய்லர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஒரு இளம் பெண் குளியலறையின் தரையில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டார்.
குற்றம் நடந்த இடத்தை சுத்தம் செய்ய அச்சிறுவன் முயற்சி செய்த அறிகுறிகள்ள காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 13 வயதுடைய சிறுமி என பிலடெல்பியா அதிகாரி தெரிவித்துள்ளார் .
சிறிது நேரம் கழித்து, பொலிஸார் சந்திக்க நபரான ஜோசுவா கூப்பரை கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர். குற்றவியல் கொலை, குற்றத்திற்கான கருவிகளை வைத்திருந்தல் மற்றும் ஆதாரங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
கூப்பர், சிறார் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணை வரும் டிசம்பர் 7-ம் திகதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.