பெண்களிடம் ஆண்கள் எந்த லிமிட்டுடன் பழக வேண்டும் தெரியுமா?
இளமையான வாலிப வயதில், வயது வந்த பெண்களை பார்க்கும் போது ஒரு விதமான காதல் கொள்ள மனம் முற்படும்.
இது இயல்பான ஒன்றாக தான் இருக்கும். பொதுவாகவே பெண்களின் உடல் அமைப்பை பார்க்கும் போது ஆண்களுக்கு, அந்த பெண்ணின் இடுப்பு மற்றும் வேறு சில பகுதியில் கண் பார்வை செல்வது இயல்பு. ஆண்களின் இயற்கை குணமே அப்படித்தான்.
இது போன்ற தருணத்தில் தான் ஆண் பெண்ணை நோக்கி செல்வது, அவள் மீது ஆசைக்கொள்வது என எது வேண்டுமென்றாலும் தோன்றலாம்.
ஆனால் இந்த தருணத்தில் நாம் அடுத்து எடுத்து வைக்கும் படி தான் மிக மிக முக்கியம். ஒரு பெண்ணை பார்த்து பிடித்து விட்டால், அந்த பெண்ணை எதற்காக பிடிக்கிறது ..? அவள் மீது காதலா..? தன்னுடைய விருப்பத்தை சொல்லலாமா..? என பல்வேறு கேள்விகள் எழும்.
அப்போது அந்த பெண்ணுக்கும் தன் மீது விருப்பம் உள்ளது என்பதை உறுதி செய்த பின்னரே அந்த பெண்ணிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பதை பற்றி கவனிக்க வேண்டும்.
அந்த பெண்ணிற்கு தான் தன் மீது விருப்பம் உள்ளதே என நினைத்து, அத்துமீறி நடக்க துணிய கூடாது.
அந்த பெண்ணுக்கு தான் தன்னை பிடித்து விட்டதே என்று எண்ணி, அவளை தொட முற்படுவது உங்கள் மீதான மரியாதையை இழக்க செய்யும்.
அதுமட்டுமில்லாமல், உங்களிடம் ஒரு பாதுகாப்பு தன்மையை உணர மாட்டார்கள்..முடிவில் பிரிந்து போக நேரிடும்.
அதற்காக, ஒரு பெண்ணை தொட்டு கூட பேச கூடாத என்பது அல்ல! ஆனால் ஒரு பெண்ணை தொட்டு பேசும் போது அதில் அன்பு இருக்க வேண்டும். முதல் தொடுதலே தவறான எண்ணத்துடன் இருக்க கூடாது என்பது முக்கியம்.