ஜேர்மனியில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டபின் மூளையில் இரத்தக்கட்டி உருவானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜேர்மனியில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டபின் மூளையில் இரத்தக்கட்டி உருவானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி ஜேர்மனியில் ஜேர்மனியில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டபின் மூளையில் இரத்தக்கட்டி உருவானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உள்ளதாகவும் ஜேர்மன் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மூளைக்கட்டி உருவானவர்களில் 12 பேர் பெண்கள், ஒருவர் ஆண். பாதிக்கப்பட்டவர்கள் 20 முதல் 63 வயதுவரை உள்ளவர்கள் ஆவர். இதற்கிடையில், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பாதுகாப்பானதா என்பது குறித்த ஐரோப்பிய மருந்துகள் ஏஜன்சியின் மீளாய்வை பெறுவதற்காக, திங்கட்கிழமை, ஜேர்மனி ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடுவதை நிறுத்தியது.
ஐரோப்பிய மருந்துகள் ஏஜன்சியின் மீளாய்வு, நேற்று மாலை கிடைத்துள்ளது. அந்த மீளாய்வின் முடிவுகள், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்று கூறியுள்ளன.
அதே நேரத்தில், தடுப்பூசியின் பக்க விளைவுகளில், சிலருக்கு மூளையில் இரத்தக்கட்டிகள் உருவாகலாம் என்ற எச்சரிக்கையும் இணைக்கப்பட உள்ளது.
ஆகவே, சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn அதிகாரப்பூர்வமாக இனி ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என தெரிவித்தபின், மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.