இறந்தும் நான்கு பிரித்தானியர்களுக்கு வாழ்வளித்த கேரளாவைச் சேர்ந்த நபர்...
கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவில் மூளைச்சாவு அடைந்த நிலையில், நான்கு பேருக்கு வாழ்வளித்துவிட்டு அவரது உடல் மட்டும் கேரளாவுக்குத் திரும்பியுள்ளது.
இறந்தும் வாழ்வளித்த இந்தியர்
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவரான குரியன் தாமஸ், இங்கிலாந்திலுள்ள Coventry நகரில் வாழ்ந்துவந்த நிலையில், அவருக்கு காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டுள்ளன.
வெறும் காய்ச்சலாக துவங்கிய பிரச்சினை, கடைசியில் மூளைச்சாவு வரை கொண்டுவந்துவிட்டது.
துணிச்சலாக முடிவெடுத்த மனைவி
தாமஸின் மனைவி அன்னம்மா, ஒரு செவிலியர் ஆவார். ஆகவே, அவர் தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளார்.
தாமஸின் இரு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதயம் ஆகிய உறுப்புகள், பிரித்தானியாவில் நான்கு பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன.
உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டு, தாமஸின் உடல் மட்டும் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நான்கு பேருக்கு வாழ்வளித்துவிட்டே இந்த உலகத்தை விட்டு கடந்து சென்றுள்ளார் தாமஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |