வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான பிராவோ டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதன் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து 3-வது டி20 போட்டியும் மழையால் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் திடீரென சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பிராவோ அறிவித்துள்ளார். இதனிடையே இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அன்றும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.
இதனால் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி டி20 தொடரை கைப்பற்றியது. கடைசியாக சர்வதேச கிரிக்கெட் பிராவோ விளையாட உள்ளதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால், அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக பிராவோ விளையாடி வருகிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளதால், ஐபிஎல் தொடரிலும் இருந்தும் பிராவோ ஓய்வு பெற உள்ளாரா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.