மரணத்தை கண்முன் காட்டிய சம்பவம்... உயிர் பயத்தில் உறைந்த சுற்றுலாப்பயணிகள்: வெளியான வீடியோ
பிரேசில் நாட்டில் பிரபல சுற்றுலாத்தலத்தில் பாறை ஒன்று பெயர்ந்து சுற்றுலாப்பயணிகள் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இதுவரை ஐவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் Furnas ஏரி அருகாமையில் canyon wall என்ற பாறை அடுக்கு அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் படகுகளில் இதன் அருகாமையில் சென்று சவாரி செய்வது வழக்கம்.
இதில், சம்பவத்தின் போது கோபுரம் போன்ற ஒரு பாறை அடுக்கு திடீரென்று பெயர்ந்து ஏரியில் விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது இரு படகுகள் அந்த பாறை அடுக்கில் சிக்கியிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
WATCH: Part of canyon collapses onto boats in southeast Brazil; at least 1 dead, 15 injured pic.twitter.com/XqaIp01fw0
— BNO News (@BNONews) January 8, 2022
எஞ்சிய படகுகள் நூலிழையில் அந்த விபத்தில் இருந்து தப்பியுள்ளதாகவே தெரிய வந்துள்ளது. இதுவரை ஐவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 பேர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது ஒருவர் தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும் 23 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோபுர வடிவான அந்த பாறை பெயர்ந்து விழயிருப்பதை சில படகில் இருந்த பயணிகள் கவனித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த பாறைக்கு அருகே நெருங்க வேண்டாம் என எச்சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.