பிரபல கால்பந்து வீரர் நெய்மாருக்கு கொரோனா உறுதி! தனிமைப்படுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி
பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நெய்மார்
ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள கால்பந்து வீரர் நெய்மார்.
பிரேசிலைச் சேர்ந்த இவர் தற்போது சான்டோஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். எனினும் காயம் காரணமாக 2 ஆண்டுகளாக அவர் சரிவர விளையாட முடியாமல் தவிக்கிறார்.
இந்த நிலையில் நெய்மாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சான்டோஸ் அணி தமது அறிக்கையில் உறுதி செய்துள்ளது.
அணி நடவடிக்கைகளில் இருந்து நீக்கம்
இதன் காரணமாக 33 வயதாகும் நெய்மார் உடனடியாக அணி நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதங்கள் பின்னர் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக பிரேசில் Serie A தரப்பும் தெரிவித்துள்ளது.
தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |