கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்; தனது சவக்குழியை தானே தோண்டிய கொடுமை!
பிரேசிலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவர், சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்படுவதற்கு முன், அவரது சவக்குழியை அவரே தோண்டிய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
The Sun UK செய்தித்தாளில் வெளியான தகவல்களின்படி, 21 வயதான Amanda Albach, டிசம்பர் 3-ஆம் திகதி சான்டா கேடரினா கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் விசாரணை நடத்தியத்தைத் தெடர்ந்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில் ஒரு சந்தேக நபர், அவர்கள் மூவரும் சேர்ந்தே அமண்டாவை கொலை செய்ததாகவும், அதற்கு முன்பாக அவரையே சவக்குழியை தொண்ட வைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
Image: Newsflash
இந்த கொடூரமான சம்பவம் நவம்பர் 15-ஆம் திகதி நடந்துள்ளது. அதற்கு முன்னதாக அவர், நவம்பர் 14-ஆம் திகதி Florianopolis நகரத்தில் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு தான் அவர் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் காவல்துறைத் தலைவர் புருனோ பெர்னாண்டஸ் கூறுகையில், அமண்டா அல்பாக் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக சில நண்பர்களுடன் சாண்டா கேடரினாவுக்குச் சென்றுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அல்பாக் அவர்களின் படங்களை எடுத்துள்ளார்.
Image: Newsflash
அல்பாக் விருந்து முடித்து வீட்டுக்கு வராததால், குடும்ப உறுப்பினர்கள் கவலையடைந்தனர். அவர்கள் அவளுடைய எண்ணுக்கு அழைத்தார்கள் ஆனால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், பொலிஸில் புகார் அளித்ததையடுத்து தேடுதல் தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்தின் மத்தியில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் வியாபாரி ஒருவரைப் பிடித்து, விசாரணையில், அவர் அல்பாக்கைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
Image: Newsflash
சந்தேக நபர் அல்பாக்கை தனது கூட்டாளிகளுடன் சுட்டுக் கொன்றதாக பொலிஸாரிடம் தெரிவித்தார். முன்னதாக, அவர்கள் அவளை தானே சவக்குழியை தோண்டி எடுக்கும்படி கட்டாயப்படுத்தினர். சடலத்தை அதில் புதைத்துவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர், என்று கூறினார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022