நடுரோட்டில் பீட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்! தெரியவந்த காரணம்
நியூயார்கில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பிரேசில் அதிபர் நடைபாதையில் பீட்சா சாப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ஐ.நா. சபை கூட்டம் இன்று முதல் தொடங்கயுள்ளது. இதில் 193 நாடுகளின் முக்கிய தலைவர்கள் சபையில் பங்கேற்க உள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக சில தலைவர்கள் காணொலி மூலம் கலந்து கொள்கின்றனர். இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வதால் வருகின்ற 23ஆம் தேதி அமெரிக்கா வருகிறார்.
இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜயர் போல்சனாரோ கூட்டத்தில் இன்று பேசயிருப்பதால் இவர் நேற்றே நியூயார்க் நகருக்கு வந்துள்ளார். தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே நியூயார்க் நகரில் உள்ள உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியும்.
ஆனால் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க எந்த வித தடையும் இல்லை. இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பிரேசில் அதிபர் உணவகத்திற்குள் அனுமதிக்கப்படாத காரணத்தினால் அங்குள்ள நடைபாதை கடையில் நின்றபடியே பீட்சா சாப்பிட்டார்.
இதுகுறித்து நியூயார்க் நகர மேயர் பிளேசியோ, பிரேசில் அதிபரை உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்.