ஐரோப்பிய நாடு ஒன்றில் நடந்த பயங்கரம்! பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை தாக்கிய சிறுவன்: கதறி அழுத பெற்றோர்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றன பிரேசிலில், மழலையர் பள்ளிக்குள் சிறுவன் புகுந்து பட்டா கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள Santa Catarina மாகாணத்தின் சவுடேட்ஸ் நகரில் மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது 18 வயதான சிறுவன் ஒருவன் கையில் பட்டா கத்தியுடன் மழலையர் பள்ளிக்குள் நுழைந்து, நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை கத்தியால் சரமாரியாக வெட்டினான்.
அவர் அந்த இடத்திலே இரத்த வெள்ளத்தில் சரிந்து துடி துடித்து இறந்தார். ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள் வெளியே வந்து பார்த்துவிட்டு, உடனடியாக அவர்கள் வகுப்பறைகளில் உள்ள குழந்தைகளை காப்பாற்றுவதற்காக வகுப்பறைகளுக்குள் ஓடிச் சென்று கதவுகளை பூட்டி கொண்டனர்.
ஆனாலும் அந்த சிறுவன் ஒரு வகுப்பறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளையும் ஆசிரியை ஒருவரையும் பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினான்.
இதில் 2 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும் ஒரு ஆசிரியையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரியவர, விரைந்த வந்த பொலிசார், பள்ளியை தங்களுடைய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, பின்னர் சிறுவனை கைது செய்ய முற்பட்டனர்.
ஆனால், சிறுவன் பொலிசாருக்கு பயந்து, பட்டா கத்தியால் தன்னைத் தானே வெட்டிக் கொண்டான். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் தாக்குதல் நடத்திய சிறுவனின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.
மேலும், இந்த சம்பவத்தை உடனடியாக விரைந்து வந்த பெற்றோரில் சில தங்கள் குழந்தைகளின் நிலையைக் கண்டு கண்கலங்கினர். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் உணர்ச்சியை அடக்கமுடியாமல் அழுததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.