கணவரை கொலை செய்துவிட்டு மனைவி செய்த பயங்கர செயல்! மிரண்டு போன பொலிசார்: அதிர வைத்த வாக்குமூலம்
பிரேசிலில் மனைவி கணவனை கொலை செய்து, அவரது மர்ம உறுப்பை எண்ணெய்யில் போட்டு பொறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் உள்ள Sao Goncalo என்ற நகரைச் சேர்ந்த தம்பதி ஆண்ட்ரே மற்றும் கிறிஸ்டினா மச்சாடோ.
இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்த நிலையில், கடந்த 7-ஆம் திகதி இருவருக்கும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், கிறிஸ்டினா மச்சாடோ கணவனை கொலை செய்ய முடிவு செய்து, அவரை கொலை செய்துள்ளார்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்த வந்த பொலிசார் தம்பதி வசித்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, ஆண்ட்ரே நிர்வாண நிலையில், உடல் சிதைக்கப்பட்டு கடும் கொடூரமாக இறந்து கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், உடனடியாக மனைவியான கிறிஸ்டினா மச்சாடோவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, கிறிஸ்டினா மச்சாடோ, கணவர் அடிக்கடி கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்தார்.
இதனால் சுயபாதுகாப்புக்காக அவரை கொலை செய்ததாகவும், அவரின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி தனியாக எடுத்து அதை வாணலியின் வைத்து சோயா எண்ணெய்யில் போட்டு பொறித்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட பொலிசார் மிரண்டு போய்விட்டனர். அதன் பின் அவர் மீது கொலை செய்ததுடன், உடலை சிதைத்தது போன்ற குற்றங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த தம்பதியருக்கு 8 வயதில் மகனும், 5 வயதில் மகளும் இருக்கிறார்கள்.
ஆனால் குழந்தைகள் இருவரும் சம்பவம் நடந்த போது எங்கிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை. மேலும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கிறிஸ்டினா கணவரிடம் இருந்து பிரிந்து விட ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால், அதற்கு ஆண்ட்ரே மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி என்னிடம் இருந்து பிரிவதென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.
கிறிஸ்டினா மச்சாடோ தன்னுடைய சுய பாதுகாப்புக்காக கொலை செய்ததாக கூறியிருந்தாலும், இப்படி கணவனின் மர்ம உறுப்பை வெட்டி எடுத்து கொலை செய்யும் அளவிற்கு அவர் செய்துள்ளதால், பொலிசார் இந்த கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.