பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை: மருத்துவமனையில் இருந்து திருடிச் சென்ற 19 வயது இளம்பெண்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பிறந்து ஒருநாள் மட்டுமே ஆன குழந்தையை 19 வயது இளம்பெண் ஒருவர் தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை திருடிய இளம்பெண்
பிரேசிலின் ரியோ டி ஜெனிராவில் உள்ள அமெலியா பர்க் டி ஹாலண்டா முனிசிபல் மகப்பேறு மருத்துவமனையில் இருந்து பிறந்து ஒருநாள் மட்டுமே ஆன குழந்தையை குவான் மலாக்கியாஸ்(Cuane Malaquias) என்ற 19 வயது இளம்பெண் திருடிச் சென்றார்.
குழந்தையின் தாய் நிவியா ரபெலோ(27) மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் மருத்துவமனையில் தூங்கி கொண்டு இருக்கும் போது மர்மாக நுழைந்த மலாக்கியாஸ் கம்பளி பையில் குழந்தை ரவி குன்ஹா-வை(Ravi Cunha) திருடிச் சென்றுள்ளார்.
Police Handout
நள்ளிரவு 2 மணியளவில் தற்செயலாக கண் விழித்த தாய், தனது குழந்தையை காணவில்லை என்பதை உணர்ந்து உடனடியாக அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, இளம்பெண் ஒருவர் பால்கனி வழியாக மேல் ஏறி வந்து குழந்தையை பையில் வைத்து திருடி விட்டு எந்தவொரு தடையும் இன்றி மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் வழியாக தப்பிச் சென்றுள்ளார்.
Police Handout
கைது செய்யப்பட்ட இளம்பெண்
இதையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து மருத்துவமனையில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ள வீட்டில் இளம்பெண் மலாக்கியாஸை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது குழந்தை தன்னுடையது என்று மலாக்கியாஸ் பொலிஸாரிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |