அழகாக்கிக்கொள்ள அறுவைசிகிச்சை மேற்கொண்ட 2 குழந்தைகளின் தாய் மரணம்! அதிர்ச்சி பின்னணி
பிரேசிலைச் சேர்ந்த 40 வயது பெண், தனது பின்னழகினை அறுவைசிகிச்சை செய்து அழகாக்கிக்கொள்ளும் முயற்சியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலமான பெண்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த லிஜியா ஃபாசியோ (40) என்ற பெண், தனது பின்னழகினை மேலும் அழகாக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
நிருபரான இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான followersஐ கொண்டிருந்தார். இந்த நிலையில், தன்னை ஒரு செவிலியர் என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் லிஜியாவுக்கு 'Butt lift surgery' எனும் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அவரது பிட்டத்தில் சிலிகான் மற்றும் பாலிமெதில் மெதக்ரிலேட் செலுத்தப்பட்டதால் மே மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிர்ச்சி மரணம்
அறுவை சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்து பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டதாகவும், லிஜியா நான்கு வாரங்கள் தீவிர சிகிச்சையில் இருந்ததாக நம்பப்படுகிறது.
இதனையடுத்து மே 31ஆம் திகதி லிஜியா உயிரிழந்துள்ளார் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 2021ஆம் ஆண்டில், அவரது உடல் முழுவதும் பரவியிருந்த சிலிகானை மருத்துவர்கள் அகற்றியதால், அவர் 100 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனது சகோதாரின் மரணம் குறித்து ஜார்ஜ் ஒலிவேரா ஒன்லைனில் வெளியிட்ட இடுகையில், 'நண்பர்களே, துரதிர்ஷ்டவசமாக எங்கள் வீராங்கனை இறந்துவிட்டார். உங்கள் அனைத்து ஆதரவுக்கும் மீண்டும் நன்றி' என கூறியுள்ளார். லிஜியா பஃபாசியோவுக்கு 11 மற்றும் 2 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
@Instagram/Lygia Fazio