இங்கிலாந்தில் பள்ளி அருகே துப்பாக்கியுடன் நடமாடும் மாஸ்க் அணிந்த மர்ம நபர்: மீண்டும் வரலாம் என்பதால் அச்சம்
இங்கிலாந்தில் பள்ளி ஒன்றின் அருகே துப்பாக்கியுடன் நடமாடும் நபர் ஒருவரை பொதுமக்கள் சிலர் எதிர்கொண்டுள்ளனர்.
மாஸ்க் அணிந்த மர்ம நபர்
இங்கிலாந்திலுள்ள Eton College என்னும் பள்ளியின் அருகே, காரில் சென்றுகொண்டிருந்த 70 வயது நபர் ஒருவரை நோக்கி வந்த மாஸ்க் அணிந்த நபர் ஒருவர், அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளார். பயந்துபோன அந்த காரை இயக்கியவர் அங்கிருந்து வேகமாக செல்ல, துப்பாக்கி சுடும் சத்தம் அவருக்கு கேட்டுள்ளது.
ஆனால், அவருக்கோ அவரது காருக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை.
Image: The Gazette
பின்னர் 60 வயதுடைய ஒருவர் தன் காரில் அமர்ந்திருக்கும்போது, அதே மாஸ்க் அணிந்த நபர் துப்பாக்கியைக் காட்டி, தன்னிடம் வருமாறு அந்த காரில் அமர்ந்திருந்தவரை நோக்கி சைகை காட்டியுள்ளார்.
பயந்துபோன அவர் தன் காரில் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டார். அவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
Image: Getty Images/iStockphoto
உருவாகியுள்ள அச்சம்
பொலிசார் அந்த மர்ம நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களுடைய உதவியை நாடியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள், மீண்டும் அந்த நபர் தாக்கலாம் என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
Image: PA