அதிகாலையில் கேட்ட வெடிச்சத்தம்... பரபரப்பான ஈரான்: நிலவும் மர்மம்
ஈரானில் இன்று அதிகாலை கேட்ட வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான ஈரான்
இன்று அதிகாலை, ஈரானின் மத்தியிலுள்ள நகரமான Isfahanஇல் வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதியில் வாழும் மக்கள் கூறியுள்ள நிலையில், ஈரான் தடுப்பு நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவை ட்ரோன் தாக்குதல்களாக இருக்கலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ள நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் விடயத்தை இஸ்ரேல் உறுதிசெய்யவில்லை.
உள்ளூர் மக்களும், ஊடகங்கள் சிலவும் வெடிச்சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ள நிலையில், யாரும் முழுமையான விவரங்களை வெளியிடவில்லை.
தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் Isfahan நகரம், ஈரான் ராணுவ தளங்களில் ஒன்றாகவும், நாட்டின் அணு ஆயுதங்களுடன் தொடர்புடைய இடமாகவும் அமைந்துள்ளதால் அது முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கருதப்படுகிறது.
Image: sentdefender/X
மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ள விமானங்கள்
இதற்கிடையில், துபாயை மையமாகக் கொண்ட சில விமான நிறுவனங்கள், அதிகாலை 4.30 மணியளவில் தங்கள் விமானங்களை மேற்கு ஈரானிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பாதை வழியாக திருப்பிவிட்டுள்ளன.
BREAKING: ISRAEL ARMY BOMBED AREAS NEAR ISFAHAN AND NATANZ WHICH CONTAINS IMPORTANT FACILITIES OF IRAN’S NUCLEAR PROGRAM pic.twitter.com/8WTvtqWkrL
— Sulaiman Ahmed (@ShaykhSulaiman) April 19, 2024
அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றாலும், மேற்கு ஈரான் பகுதியிலுள்ள வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டிருக்கக்கூடும் என விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Image: ABC News
ஈரானுடைய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்குமானால், பிரச்சினை பெரிதாகலாம் என பல நாடுகள் எச்சரித்துள்ள நிலையில், இன்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தியதாக கூறப்படும் செய்தி உண்மையானால், அதனாம் போர் மூழும் அபாயம் உள்ளது. ஆகவே, மூன்றாம் உலகப்போர் மூழலாம் என்னும் அச்சம் அப்பகுதியில் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.
Image: Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |