ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் பெண்! பிரபல நாட்டில் அதிசயம்
மாலி நாட்டில் இளம் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றுள்ள அதிசய நிகழ்வு உலகத்தை ஈர்த்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான மாலியில், நேற்று (செவ்வாய்கிழமை) 25 வயதாகும் ஹலீமா சிஸே (Halima Cisse) என்ற பெண் ஓரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், ஹலிமா சிஸ்ஸின் கர்ப்பம் மாலி தேசத்தை கவர்ந்தது மற்றும் அதன் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது.
மார்ச் மாதத்தில் மருத்துவர்கள் ஹலீமாவுக்கு சிறப்பு கவனிப்பு தேவை என்று கூறியதையடுத்து, அதிகாரிகள் அவரை மொராக்கோவிற்கு விமானத்தின் மூலம் அனுப்பிவைத்தனர்.
அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள், ஹலீமா சிஸேவின் கர்ப்பப்பையில் 7 குழந்தைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். ஆனால் நேற்று பிரசவத்தின்போது யாருமே எதிர்பாராத விதமாக அவருக்கு கூடுதலாக இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்தும் சிசேரியன் மூலம் பிறந்துள்ளன.
புதிதாகப் பிறந்த (5 பெண் மற்றும் 4 ஆண்) குழந்தைகள், மற்றும் தாய் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்று மாலியின் சுகாதார அமைச்சர் ஃபாண்டா சிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Nonuplets, அதாவது 9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெர்றேடுப்பது மிகவும் அரிதானவை. இந்த வகையான பல பிறப்புகளில் மருத்துவ சிக்கல்கள் அதிகமாக இருக்கும். பெரும்பாலும் சில குழந்தைகள் முழு காலத்தை எட்டியது இல்லை என கூறப்படுகிறது.