பிரித்தானியாவில் திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு மணமகன் கொடுத்த மறக்கமுடியாத அதிர்ச்சி
திருமணத்தன்று மணமகன் ஒருவர் மணப்பெண்ணுக்கு கொடுத்த அதிர்ச்சியை அவர் வாழ்நாளுக்கும் மறக்கமாட்டார்.
திருமணத்துக்கு அனைவரும் தயாராக இருக்க, முக்கியமான ஒருவர் மட்டும் திருமணத்துக்கு வரவேயில்லை.
பிரித்தானியரான அந்தப் பெண் 12,000 பவுண்டுகள் செலவு செய்து தன் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
அவரது பெயர் Kayley Stead (27). வேல்ஸிலுள்ள ஒரு பெரிய ஹொட்டலில் அவருக்கும் Kallum Norton (24) என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Image: Neil Jones Photography / SWNS
திருமண நாள் அன்று, மணப்பெண் வீட்டார், நண்பர்கள், உறவினர்கள் என ஒரு கூட்டமே ஹொட்டலில் காத்திருக்க, Nortonஉடைய தந்தையிடமிருந்து Kayleyக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர், வருந்துகிறேன், Norton நாம் இருக்குமிடத்திலிருந்து 4 மணி நேர தொலைவிலிருக்கிறான் என்று கூறியிருக்கிறார். அப்போது திருமணத்துக்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருந்திருக்கிறது.
ஒருவேளை Norton தாமதமாக வருவாரோ என்று எண்ணியிருக்கிறார் Kayley. ஆனால், அவர் வரவேயில்லை.
என்ன நடந்தது, ஏன் திடீரென Norton திருமணத்திற்கு வரவில்லை என குழம்பிப்போயிருக்கிறார் Kayley.
பின்னர் ஒருவழியாக Nortonஐக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டால், அதைக் குறித்து நான் பேச விரும்பவில்லை என்று மட்டும் சொன்ன அவர், திருமணம் நின்றுபோனதற்காக மன்னிப்புக் கூட கேட்கவில்லையாம்.
திட்டப்படி இப்போது தம்பதியர் துருக்கியில் தேனிலவைக் கொண்டாடிக்கொண்டிருந்திருக்கவேண்டும். ஆனால், Kayley மட்டும் திருமணம் நின்றுபோன கவலையுடன், தன் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அவருடைய வீட்டிலிருக்கும் தனது உடைமைகளை எடுக்கக்கூட Norton அங்கு வரவில்லை!