கொடுங்கனவு முடிவுக்கு வந்தது... ஹமாஸ் விடுவித்த பிரித்தானிய பணயக்கைதியின் தாயார் உருக்கம்

London Israel-Hamas War Gaza
By Arbin Jan 19, 2025 07:43 PM GMT
Report

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கிடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இழுபறிகளுக்கு மத்தியில் அமுலுக்கு வந்த நிலையில், பிரித்தானியர் உட்பட மூன்று பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பெண்கள்

கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் முன்னெடுத்து வந்த உக்கிரமான போர் முடிவுக்கு வந்துள்ளது. கடும் இழுபறிகளுக்கு முடிவில் இறுதியாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

கொடுங்கனவு முடிவுக்கு வந்தது... ஹமாஸ் விடுவித்த பிரித்தானிய பணயக்கைதியின் தாயார் உருக்கம் | Brit Hostage Mum Says Nightmare Is Over

இதன் முதற்கட்டமாக பணயக்கைதிகள் மற்றும் சிறைவாசிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரித்தானியரான 28 வயது Emily Damari உட்பட மூன்று பெண்கள் ஹமாஸ் படைகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச செஞ்சிலுவை அமைப்பிடம் ஹமாஸ் படைகள் ஒப்படைக்க, பின்னர் இஸ்ரேல் இராணுவத்தினரிடம் ஒப்பட்டைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு வரவேற்பு இடத்திற்கு வந்தனர், அங்கு மூவரும் தங்கள் தாய்மார்களுடன் உணர்ச்சிபூர்வமான சந்திப்பை நடத்தினர்.

இந்த நிலையில், பிரித்தானியரான எமிலி தமாரியின் தாயார், தனது அன்பு மகள் திரும்பியதைத் தொடர்ந்து, மனதை உருக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 471 நாட்களுக்குப் பிறகு எமிலி இறுதியாக வீடு திரும்பியுள்ளார் என மாண்டி தமாரி குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடன் 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்துகொண்ட ரஷ்யா... முழுமையான பின்னணி

ஈரானுடன் 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்துகொண்ட ரஷ்யா... முழுமையான பின்னணி

இந்த கொடூரமான சோதனை காலம் முழுவதும் எமிலிக்காக போராடுவதை நிறுத்தாத அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் போராட்ட குணமே எமிலியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது என்றார்.

அக்டோபர் 7 தாக்குதலின் போது ஹமாஸ் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் எமிலி இரண்டு விரல்களை இழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

எமிலியின் கை கட்டுகளால் சுற்றப்பட்டிருப்பதையும், ஒரு சில விரல் நுனிகள் காணாமல் போயுள்ளதையும் அவர் குடும்ப உறுப்பினர்களுடன் காணொளி அழைப்பில் வந்தபோது காண முடிந்தது.

கொடுங்கனவு முடிவுக்கு வந்தது... ஹமாஸ் விடுவித்த பிரித்தானிய பணயக்கைதியின் தாயார் உருக்கம் | Brit Hostage Mum Says Nightmare Is Over

தென்கிழக்கு லண்டனில்

காஸாவில் எமிலியின் கொடுங்கனவு ஒருழியாக முடிவுக்கு வந்தது என்றே மாண்டி தமாரி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு பணயக்கைதியும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், வீடு திரும்பக் காத்திருக்கும் பணயக்கைதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மாண்டி தமாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீவிரமான கடைசி நிமிட பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் போர்நிறுத்தம் அமுலுக்கு வர சில மணிநேரங்கள் தாமதமானது. ஒருகட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும் நெருக்கடியும் ஏற்பட்டது.

கொடுங்கனவு முடிவுக்கு வந்தது... ஹமாஸ் விடுவித்த பிரித்தானிய பணயக்கைதியின் தாயார் உருக்கம் | Brit Hostage Mum Says Nightmare Is Over

இறுதியில் ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் மூன்று பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எமிலி தமாரி தனது 20 வயதில் இஸ்ரேலுக்கு குடிபெயர்வதற்கு முன்பு தென்கிழக்கு லண்டனில் வசித்து வந்துள்ளார்.

எமிலி தனது இரட்டை சகோதரர்களான 27 வயது ஷிவ் மற்றும் கலி பெர்மன் ஆகியோருடன் ஹமாஸ் படைகளால் இஸ்ரேலில் தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதை அடுத்து தனது மகளின் விடுதலைக்காக லண்டனில் பிறந்த மாண்டி தமாரி தீவிரமாக போராடி வந்துள்ளார்.

இஸ்ரேல் பணயக்கைதிகளுக்கு பதிலாக பாலஸ்தீன கைதிகள் 95 பேர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US