பிரித்தானியாவுக்கு 1.2 மில்லியன் பணியாளர்கள் தேவை: புலம்பெயர்ந்தோரைக் கொண்டு காலியிடங்களை நிரப்ப பரிந்துரை
பிரித்தானியாவில் 1.2 மில்லியன் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
அவற்றை புலம்பெயர்ந்தோரைக் கொண்டு நிரப்ப அமைச்சர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.
பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவில் 1.2 மில்லியன் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை புலம்பெயர்ந்தோரைக் கொண்டு நிரப்ப அமைச்சர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.
பணி மற்றும் ஓய்வூதியங்களுக்கான செயலரான Chloe Smith, திறன்மிகு வெளிநாட்டுப்பணியாளர்களைக் கொண்டு பிரித்தானியாவில் காணப்படும் பணியிடங்களை நிரப்ப பரிந்துரை செய்துள்ளார்.
எந்த நாட்டவர்களானாலும், பணியிடங்களை நிரப்ப தங்கள் குடிமக்களுக்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள். பிரித்தானியா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
ஆகவே, Chloe Smithம் கூட, பெரும்பாலான பணியிடங்களை நிரப்ப பிரித்தானியர்களுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
Credit: Getty
சமீபத்தில், பிரித்தானியாவில் அதிகரித்துவரும் புலம்பெயர்தல் குறித்த விவாதம் ஒன்று எழுந்தது. பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், மொத்தத்தில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையையே குறைக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
அதே கருத்தை ஆமோதிக்கும் விதமாக, இந்த நாட்டில் வாழும் பிரித்தானியர்களுக்கு பணிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவது சரியானதுதான் என்று கூறியுள்ள பணி மற்றும் ஓய்வூதியங்களுக்கான செயலரான Chloe Smith, அதே நேரத்தில், கொஞ்சம் புலம்பெயர்ந்தோருக்கும் அதில் பங்களிப்பு கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.