ஹன்டாவைரஸ் பரவல்... 10 பேரைத் தனிமைப்படுத்தும் பிரித்தானியா
ஹன்டா வைரஸ் பரவலில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 10 பேர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எந்த அறிகுறிகளும் இல்லை
இவர்கள் பிரித்தானியாவின் தொலைதூரத் தீவுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த நபர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை முற்றிலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே எடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அட்லாண்டிக் வழியாகப் பயணித்து, பல இடங்களில் நிறுத்தங்களை மேற்கொண்ட எம்.வி. ஹோண்டியஸ் என்ற சொகுசு உல்லாசக் கப்பலில் இந்த நோய்ப் பரவல் ஏற்பட்டுள்ளது.
தற்போது பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்ட 10 பேர்களும் செயின்ட் ஹெலினா தீவு மற்றும் அசென்ஷன் தீவு ஆகிய வெளிநாட்டுப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், செயின்ட் ஹெலினாவில் 32 பயணிகளும் ஒரு கப்பல் ஊழியரும் எம்.வி. ஹோண்டியஸ் கப்பலிலிருந்து இறங்கியதாகவும், மேலும் இருவர் அசென்ஷன் தீவு வழியாக மருத்துவ அவசரம் காரணமாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, பொதுமக்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்து மிகக் குறைவாகவே உள்ளது என்றும், கப்பலுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் பணி தொடரும் என்றும் சுகாதார முகமை தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |