37,000 அடியில் பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்: நிர்வாணமாக நடனமாடிய ஊழியரால் பரபரப்பு
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.
சுமார் 37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமான ஊழியர் ஒருவர் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நடனமாடி, பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த அசாதாரண சூழ்நிலையால், சக ஊழியர்கள் அவரை விமானம் தரையிறங்கும் வரை கட்டிப் போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
நடுவானில் நடந்த கூத்து
சுமார் 470 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் ஏ380 விமானத்தில் இந்த வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.
விமானம் புறப்பட்டு சில மணி நேரம் எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. ஆனால், உணவு பரிமாறும் நேரம் வந்தபோது, ஒரு ஆண் ஊழியர் திடீரென மாயமாகியுள்ளார்.
பதறிப்போன சக ஊழியர்கள் அவரைத் தேடத் தொடங்கினர். அப்போது, பிசினஸ் கிளாஸ் கேபினில் உள்ள கழிவறையில் அந்த ஊழியர் நிர்வாணமாக, மயக்க நிலையில் நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.
அந்த ஊழியருக்கு உதவச் சென்ற சக ஊழியர்களிடமும் அவர் சண்டையிட்டுள்ளார். வேறு வழியின்றி, போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரை ஒரு இருக்கையில் கட்டிப்போட்டனர்.
சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக அவர் அதே நிலையில் கட்டிப் போடப்பட்டிருந்தார். விமானம் லண்டனில் தரையிறங்கியதும், அந்த ஊழியரை பொலிஸார் கைது செய்தனர்.
என்ன நடந்தது?
விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, அவர் ஏதோ போதை மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறோம்," என்று ஒரு சக ஊழியர் தெரிவித்துள்ளார்.
நல்லவேளையாக, இந்த ஊழியரின் செயலால் பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படவில்லை.
விமானத்தின் செயல்பாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தை பிரிட்டிஷ் ஏர்வேஸ் உறுதிப்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |