ஐரோப்பிய நாடொன்றில் பிரித்தானியர்களுக்கு நேர்ந்த சோகம்: ஆற்றில் பாய்ந்த 300,000 மதிப்பு கார்
ஸ்பெயின் நாட்டில் பிரித்தானியர் இருவர் காருடன் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆற்றில் பாய்ந்த பிரித்தானிய கார்
வடக்கு ஸ்பெயினின் Boca de Huerganoவில் ஃபெராரி சொகுசு கார் யூசோ ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.
கார் ஒன்று ஆற்றில் ஓரளவு மூழ்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் மூலம், மீட்புப்படையினரால் வெளியே எடுக்கப்பட்டது. அதில் 78 மற்றும் 58 வயதுடைய இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்.
மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே அவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தினர். ஆறு மணி நேரத்திற்கும் மேலாக இந்த மீட்புப்பணி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெடுஞ்சாலையில்
முதற்கட்ட விசாரணையில், பிரித்தானிய எண் பலகை கொண்ட காரினை ஓட்டி வந்த இருவரும், முந்தைய நாள் வடமேற்கு ஸ்பெயினில் உள்ள லியோனுக்கு ஓட்டி வந்தது தெரிய வந்தது.
மேலும், விபத்திற்கு முன்பு இருவரும் N-621 நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இதன் மதிப்பு 300,000 யூரோ ஆகும்.
உயிரிழந்தவர்கள் ஆங்கில ஆணும், பெணும் என ஸ்பெயின் சிவில் காவலர் ஊடகத்திடம் தெரிவித்தார். அத்துடன் விபத்து தொடர்பாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |