வெளிநாட்டில் தூக்குத்தண்டனையை எதிர்கொள்ளும் ஐ.எஸ் படையில் இணைந்த பிரித்தானியர்கள்

Syria Iraq
By Arbin Jan 23, 2026 05:47 PM GMT
Report

ஐ.எஸ் படையில் இணைந்துள்ள பிரித்தானியர்கள் அமெரிக்க இராணுவத்தால் சிரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து ஈராக்கில் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நூற்றுக்கணக்கானோரை

சிரியாவில் குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் சுமார் 100,000 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தூக்குத்தண்டனையை எதிர்கொள்ளும் ஐ.எஸ் படையில் இணைந்த பிரித்தானியர்கள் | British Fighters Face Executed

இவர்கள் எவரையும் அவர்களின் சொந்த நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன. ஈராக்கிற்கு மாற்றப்படவிருக்கும் ஆயிரக்கணக்கான ஐ.எஸ் பயங்கரவாதிகளில் சிலர் வெளிநாட்டவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில், ஈராக் தனது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ், ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு வைத்திருந்த நூற்றுக்கணக்கானோரைத் தூக்கிலிட்டுள்ளது.

இந்த நிலையில், Reprieve என்ற மனித உரிமைகள் அமைப்பின்படி, சிரியாவில் உள்ள ஐ.எஸ் சிறைகளில் குறைந்தது பத்து பிரித்தானிய வம்சாவளி ஆண்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோரின் பிரித்தானியக் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

ஏழு மடங்கு பதிலடி உறுதி... ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை

ஏழு மடங்கு பதிலடி உறுதி... ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை

இந்த பிரித்தானியக் கைதிகள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படாமல், சித்திரவதை மற்றும் மரணதண்டனைக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர் என்றே Reprieve தெரிவித்துள்ளது.

இதனிடையே, 2015-ல் ஐ.எஸ் படையில் சேருவதற்காக லண்டனிலிருந்து சென்ற ஷமிமா பேகம் உட்பட, சுமார் 55 பிற பிரித்தானியர்கள் அல்லது முன்னாள் பிரித்தானியக் குடிமக்களும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தூக்குத்தண்டனையை எதிர்கொள்ளும் ஐ.எஸ் படையில் இணைந்த பிரித்தானியர்கள் | British Fighters Face Executed

தாக்குதல் நடத்தக்கூடும்

அவர்களில் ஏறக்குறைய பாதி பேர் சிறார்கள் என்றே நம்பப்படுகிறது. இந்த நிலையில், குர்துகள் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் சிரிய இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், இந்த முகாம்கள் தற்போது சிக்கியுள்ளன.

நடந்து வரும் மோதல்கள், அல்-ஹோல் சிறை முகாம் உட்பட, பல முகாம்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்துள்ளன. இதனிடையே, அமெரிக்க இராணுவம் புதன்கிழமை அன்று, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மிகவும் ஆபத்தான 150 பயங்கரவாதிகளை ஈராக்கிற்கு மாற்றியதுடன், மேலும் 7,000 பேரை இடமாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டில் தூக்குத்தண்டனையை எதிர்கொள்ளும் ஐ.எஸ் படையில் இணைந்த பிரித்தானியர்கள் | British Fighters Face Executed

பயங்கரவாதிகளில் பலர் ஐரோப்பாவிற்குத் திரும்பி வந்து தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கவலைப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஈராக்கில் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கலில் பிரித்தானியர்களும் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த 100,000 ஐ.எஸ் பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் ஈராக்கியர்கள், அடுத்து பல நாடுகளைச் சேர்ந்த அரேபியர்கள்,

தொடர்ந்து பிரித்தானியர்கள், பிரெஞ்சு நாட்டவர்கள், ஜேர்மன், பெல்ஜியம் மற்றும் ஸ்வீடன் நாட்டவர்களும் குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாட்டவர்களும் இதில் உட்பட்டுள்ளனர்.

இதில் எத்தனை எண்ணிக்கையில் பிரித்தானியர்கள் என்பது தெரிய வாய்ப்பில்லை என்றும், கடந்த பல வருடங்களாக வெளிச்சம் உள்ளே புகாத சிறைகளில் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US