காசாவில் பிரிட்டிஷ்-இஸ்ரேலிய ராணுவ வீரர் மரணம்: இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல்!
காசாவில் பிரித்தானிய-இஸ்ரேலிய ராணுவ வீரர் மரணமடைந்து இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ்-இஸ்ரேலிய வீரர் மரணம்
காசா போரில் பிரிட்டிஷ்-இஸ்ரேலிய இராணுவ வீரர ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது பெயர் செர்ஜண்ட் இஸ்ரேல் நடான் ரோசன்ஃபீல்ட் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ர'னானா(Ra'anana) நகரைச் சேர்ந்தவர்.
இந்த சம்பவம் குறித்து, வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (Foreign, Commonwealth and Development Office) "காசாவில் நடந்த சண்டையில் உயிரிழந்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) வீரர் பிரிட்டிஷ் குடிமகனா என்பதை விசாரித்து வருவதாக" தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகையின்படி, 601வது போர் பொறியியல் பட்டாலியனில் பணியாற்றிய இந்த IDF வீரர், ஞாயிற்றுக்கிழமை ஒரு வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ரோசன்ஃபீல்ட் 11 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் லண்டனில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்ததாக அந்தப் பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை 860க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 400க்கும் அதிகமானோர் காசா சண்டையின் போது உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போர், ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில், 1,200 பேர் கொல்லப்பட்டு சுமார் 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பின்னர் தொடங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |