முடிசூடும் நாளில் மரபை மீறவிருக்கும் பிரித்தானிய மன்னர் சார்லஸ்: ஒரு சுவாரஸ்ய தகவல்...
மன்னர் சார்லஸ் ஒரு இயற்கை விரும்பி என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
தான் மன்னராக முடிசூட இருக்கும் நாளில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு ஒன்றை மன்னர் சார்லஸ் மீறலாம் என கருதப்படுகிறது.
பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஒரு இயற்கை விரும்பி என்பதை பலரும் அறிந்திருக்கலாம். அதை நிரூபிக்கும் வகையில், தான் மன்னராக முடிசூட இருக்கும் நாளில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு ஒன்றை மன்னர் சார்லஸ் மீறலாம் என கருதப்படுகிறது.
பிரித்தானிய மரபுப்படி, மன்னராக அல்லது மகாராணியாக முடிசூடுவோர், நீண்ட அங்கி ஒன்றை அணிந்திருப்பார்கள். அந்த அங்கியின் சில பாகங்கள் ஃபர் (Fur) என்னும் விலங்குகளின் உரோமத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்.
Image: Anwar Hussein/Getty Images
அந்த உரோமத்துக்காக விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்ததுண்டு, எழுவதுண்டு. ஆகவே, 2019ஆம் ஆண்டு, தனது உடையின் எந்த பாகத்திலும் ஃபர் இடம்பெற தடைவிதித்தார் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்.
ஆகவே, தன் தாயாரின் கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தான் இயற்கையை நேசிக்கும் நபர் என்பதாலும், மன்னர் சார்லசும் தான் முடிசூடும்போது, ஃபர் வகை உடையை அணிவதை தவிர்க்கலாம் என கருதப்படுகிறது.
மேலும், அவர் அதற்கு பதிலாக, செயற்கை ஃபர் அங்கியையோ அல்லது ஏற்கனவே மன்னருடைய தாத்தாவும் பாட்டியும் அணிந்த உடைகளையே மறுசுழற்சி செய்தோ, மன்னரும் அவரது மனைவி கமீலாவும் அணியலாம் என்றும் கருதப்படுகிறது.