பிரித்தானிய மன்னரின் முதல் அரசு முறைப்பயணம் ஒத்திவைப்பு: அரண்மனை வெளியிட்டுள்ள தகவல்
பிரித்தானிய மன்னரின் முதல் அரசு முறைப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மன்னரின் முதல் அரசு முறைப்பயணம்
சார்லஸ் பிரித்தானிய மன்னராக பொறுப்பேற்றபின், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக செல்ல முடிவு செய்திருந்தார்.
அவ்வகையில், இம்மாதம், அதாவது, மார்ச் 26ஆம் திகதி முதல், 29ஆம் திகதிவரை, பிரான்சிலும், மார்ச் 29 முதல், ஏப்ரல் 2 வரை, ஜேர்மனியிலும் மன்னரும் ராணியும் செலவிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
Credit: Reuters
பிரான்ஸ் போராட்டங்கள்
ஆனால், பிரான்சில் ஓய்வு பெறும் வயதை ஜனாதிபதி அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
மில்லியன் கணக்கானோர் பங்கேற்கும் பேரணிகளில், சிலவற்றில் வன்முறை வெடித்துள்ளது, பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும், மன்னர் சார்லசும் இது தொடர்பாக தொலைபேசியில் பேசி ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி, மன்னருடைய பிரான்ஸ் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மன்னர் எப்போது பிரான்ஸ் செல்வார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
ஆனாலும், திட்டமிட்டபடி மன்னரும் ராணியும் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை ஜேர்மனியை சந்திக்க இருக்கிறார்கள்.
Credit: AFP