காதலருடன் சுற்றுலா விசாவில் சென்ற பிரித்தானிய பெண்: மரணத்தை ஏற்படுத்தியதால் சிறை..விரைந்த பெற்றோர்
அவுஸ்திரேலியாவில் விபத்தை ஏற்படுத்தி இறப்புக்கு காரணமான இளம்பெண்ணுக்காக, அவரது பிரித்தானிய பெற்றோர் அவுஸ்திரேலியா விரைந்துள்ளனர்.
சுற்றுலா விசாவில்
பிரித்தானியாவைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் அலிசியா கெம்ப், நான்கு மாத சுற்றுலா விசாவில் தனது காதலருடன் தென்கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்தார்.
கடந்த மாதம் 31ஆம் திகதி, அலிசியா மின்சார இருசக்கர வாகனத்தை இயக்கியபோது, நடைபாதையில் சென்ற Thanh Phan (51) என்ற நபர் மீது மோதியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த Thanh Phan மருத்துவமனையில் மூளைக் காயங்களால் உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டியபோது அலிசியா மது அருந்தியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். மேலும், பிணையில் விடுவிக்க முடியாதபடி சிறைப்படுத்தப்பட்டார்.
மகளுக்கு ஆதரவாக
அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலையில், காவலில் இருக்கும் அலிசியா சூலை 15ஆம் திகதி அன்று மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார்.
இந்த நிலையில், தங்கள் மகளுக்கு ஆதரவாக அலிசியாவின் பெற்றோர் பிரித்தானியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கிளம்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |