இங்கிலாந்து திரும்ப ஆவலுடன் உள்ளேன்: தாயிடம் பேசிய பின் இளைஞர் மரணம்..உடலை கொண்டுவர போராட்டம்
சீனாவில் உயிரிழந்த பிரித்தானிய ஆசிரியரின் உடலைக் கொண்டுவர குடும்பத்தினர் போராடி வருகின்றனர்.
திடீர் மரணம்
பிரித்தானியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள Teesside நகரைச் சேர்ந்தவர் பிராட்லி ஹால் (25).
Teessideயில் உள்ள பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பிராட்லி, சீன நகரம் ஷாங்காய் அருகே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 10ஆம் திகதி பிராட்லி திடீரென இறந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு, Teessideயில் உள்ள தனது தாயுடன் மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
அப்போது அவர் இங்கிலாந்துக்கு திரும்புவதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக சில நிமிடங்களில் அவர் இறந்துவிடவே, பிராட்லி நண்பர் அவரது இறப்பை தாயிடம் தெரிவித்துள்ளார்.
உடலை கொண்டுவர போராட்டம்
தற்போது பிராட்லியின் குடும்பத்தினர் அவரது உடலை பிரித்தானியாவிற்கு கொண்டுவர போராடி வருகின்றனர்.
அவர்கள் ஏற்கனவே பிரேத பரிசோதனைக்கான நடைமுறைக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டிருந்தனர்.
ஆனாலும், பிராட்லியின் உடலை கொண்டுவருவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட காலக்கெடு இல்லாமலேயே அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |