எட்டாவது மாடியில் இருந்து குதித்த பிரித்தானிய பெண்: விடுமுறைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்!
- எட்டாவது மாடியின் அறையில் இருந்து குதித்து உயிரிழந்த பிரித்தானிய பெண்மணி
- மஜோர்காவில் வசிப்பவரா அல்லது தீவில் விடுமுறையில் இருந்தாரா என்பது குறித்த தகவல் தெளிவாக தெரியவில்லை
மேஜர்கான் தலைநகர் பால்மாவில் உள்ள ஹோட்டலின் எட்டாவது மாடியில் இருந்து பிரித்தானிய பெண் ஒருவர் குதித்து உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேஜர்கான் தலைநகர் பால்மாவில் உள்ள மெலியா பால்மா மெரினா என்ற ஹோட்டலில் 48 வயதான பிரித்தானிய பெண்மணி இன்று காலை 8 மணியளவில் தனது எட்டாவது மாடியின் அறையில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெண்மணி கீழே விழுந்த நேரத்தில், அவர் தனது எட்டாவது மாடி அறையில் தனியாக இருந்ததாக நம்பப்படுகிறது. இறந்த பெண் மஜோர்காவில் வசிப்பவரா அல்லது தீவில் விடுமுறையில் இருந்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், அடையாளம் தெரியாத பிரித்தானிய பெண்ணின் மரணம் குறித்து விசாரிக்கும் பணியை அதன் கொலைப் பிரிவுக்கு வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty Images
இதே போன்று கடந்த மே மாதம் 34 வயதான பிரித்தானிய சுற்றுலா பயணி, அவர் தங்கியிருந்த மேஜர்கான் பார்ட்டி ரிசார்ட் மாகலூஃபில் உள்ள நான்கு நட்சத்திர மெலியா சவுத் பீச் ஹோட்டலின் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: கிரிமியாவில் அடுத்தடுத்து நடந்த வெடிக்குண்டு விபத்து...உக்ரைனில் பகிரப்படும் ரகசிய அறிக்கை
அதில் பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் மது அருந்து இருந்தது உறுதி செய்யப்பட்டது, மேலும் அவர் போதைப்பொருள் உட்கொண்டாரா என்பதை அறிய சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Image: booking.com