வெளிநாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பிரித்தானியாவில் புதிய விதி அறிமுகம்! அரசு முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பிரித்தானியாவில் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்படும் நபர்கள், வெளிநாட்டில் தடுப்பூசி போட்டவராக இருந்தால் கட்டாயம் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரித்தானியா அரசு அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதியை ஆகஸ்ட் 16ம் திகதி அரசாங்கம் நீக்கியது.
எனினும், வெளிநாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்த விலக்கு பெருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரித்தானிாய அராங்க செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, வெளிநாட்டில் தடுப்பூசி போட்டவர்கள், MHRA-வால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டிருந்தாலும், அவர்கள் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டால் சுயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.
கொரோனா தொற்று உறுதியாகும் நபர்கள், தடுப்பூசி போட்டிருந்தாலும் போடவில்லை என்றாலும் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.