சொர்க்கம் என கொண்டாடப்பட்ட தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் அவசரமாக வெளியேற்றம்

Emmanuel Macron Crime
By Arbin May 22, 2024 09:59 PM GMT
Report

மிக மோசமான வன்முறை சம்பவங்களை அடுத்து சொர்க்கம் என கொண்டாடப்பட்டு வந்த தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

9 நாட்களாக நீடிக்கும் வன்முறை

பிரான்சின் கடல்கடந்த பிராந்தியமான நியூ கலிடோனியா தீவு நாட்டில் கடந்த 9 நாட்களாக நீடிக்கும் பெரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 6 பேர்கள் மரணமடைந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

சொர்க்கம் என கொண்டாடப்பட்ட தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் அவசரமாக வெளியேற்றம் | Brits Evacuated From New Caledonia

அத்துடன் வாகனங்கள், அங்காடிகள், கட்டிடங்கள் என தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றி வருகின்றனர்.

கடந்த வாரம் பிரான்ஸ் ராணுவம் களமிறங்கியுள்ள நிலையில், தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நியூ கலிடோனியா புறப்பட இருக்கிறார். வெளிவரும் புகைப்படங்களில் முக்கிய சாலைகளில் தீக்கிரையான வாகனங்களை நிறுத்தி வழிமறிக்கப்பட்டுள்ளதாகவும்,

இதனால் உள்ளூர் மக்கள் அல்லது சுற்றுலாப்பயணிகள் மருத்துவ உதவியை நாடவோ உணவுக்கோ அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான பூர்வகுடியினரல்லாத குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குதல் தொடர்பில் திருத்தம் கொண்டுவர பிரான்ஸ் நிர்வாகம் அனுமதி அளித்த நிலையிலேயே ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது.

சொர்க்கம் என கொண்டாடப்பட்ட தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் அவசரமாக வெளியேற்றம் | Brits Evacuated From New Caledonia

பூர்வகுடி மக்களான Kanak சமூகம் தங்களின் வாக்குரிமையை நீர்த்துப்போக செய்யும் திட்டமிது என குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்க ஜனாதிபதி மேக்ரான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

3,200 சுற்றுலாப்பயணிகள்

ஓராண்டு காலமாக நியூ கலிடோனியாவை தங்களின் வீடு என குறிப்பிட்டு வந்த ஒரு குடும்பம் தற்போது தொடர் கலவரங்களால் தங்கள் படகில் அவுஸ்திரேலியாவுக்கே திரும்ப முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

வணிக ரீதியான விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவுதிரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கம் தங்கள் குடிமக்களை மீட்கும் பொருட்டு விமான சேவையை முன்னெடுக்கின்றனர்.

சொர்க்கம் என கொண்டாடப்பட்ட தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் அவசரமாக வெளியேற்றம் | Brits Evacuated From New Caledonia

பாடசாலைகள் மூடப்பட்டு, அங்காடிகள் பல தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தற்போது 3,200 சுற்றுலாப்பயணிகள் நியூ கலிடோனியாவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து பிரித்தானிய அரசாங்கம் தங்கள் குடிமக்களை மீட்டு வருகிறது. முன்னதாக கடந்த வாரம் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு சுமார் 1,000 ராணுவ வீரர்களை நியூ கலிடோனியாவுக்கு பிரான்ஸ் நிர்வாகம் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US