பிரித்தானியாவில் விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகளால் சாலையில் குழப்பம் ஏற்படும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மஞ்சள் எச்சரிக்கையானது நார்விச், லண்டன் மற்றும் கேண்டர்பரி உட்பட இங்கிலாந்தின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடுபனி காரணமாக வாகன சாரதிகள் சாலையில் கவனம் கொள்ள வேண்டும் எனவும் பயண இடையூறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மஞ்சள் எச்சரிக்கையானது காலை 4 மணியில் இருந்து 10 மணி வரை நீடிக்கலாம் எனவும், பயண நேரம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், பேருந்துகள் ரயில் சேவைகள் தாமதமாக வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, மூடுபனி காரணமாக விமான சேவை தாமதமாகவோ ரத்தாகவோ வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வரவிருக்கும் வாரங்களில் வெப்பநிலை சரிவடையும் மற்றும் அக்டோபர் அரையாண்டு விடுமுறை நாட்களில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.