இளவரசர் சார்லஸ் அல்ல.... இவர் தான் பிரித்தானியாவின் அரச பொறுப்புக்கு வர வேண்டும்: மக்கள் வெளிப்படை
பிரபல பிரித்தானிய நாளேடு, ஞாயிறன்று முன்னெடுத்த கருத்துக்கணிப்பில், இளவரசர் வில்லியம் அரச பொறுப்புக்கு வர வேண்டும் என மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்துக்கு தற்போது 95 வயதாகிறது. அடுத்த ஆண்டு தமது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு, மிக விரைவில் அவரது மகன் சார்லஸ் அரச பொறுப்புக்கு வருவார் என்றே அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பிரித்தானியாவின் பிரபல நாளேடு ஒன்று முன்னெடுத்த கருத்துக்கணிப்பில், 41 சதவீத மக்கள் இளவரசர் வில்லியம் அடுத்த அரச பொறுப்புக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் வெறும் 30 சதவீத மக்களே இளவரசர் சார்லஸ் அடுத்து அரச பொறுப்புக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர். நீண்ட 60 ஆண்டுகளாக அரச பொறுப்புக்காக காத்திருப்பவர் இளவரசர் சார்லஸ்.
அவருக்கே அந்த வாய்ப்பை அளிப்பது சிறந்த முடிவு என்கிறார் அரச குடும்பம் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் ஆய்வாளர் ஒருவர். இருப்பினும், அரச பொறுப்புக்கு வந்த சில ஆண்டுகளில், வயது மூப்பை காரணம் காட்டி உரிய முறைப்படி இளவரசர் வில்லியமுக்கு அரச பொறுப்பை அளிக்க இளவரசர் சார்லஸ் முன்வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகனிடம் கண்டிப்பாக இளவரசர் சார்லஸ் சரணடையமாட்டார் என குறிப்பிட்டுள்ள அவர், அரச பொறுப்புக்கு வந்த பின்னர் தமது பெயரை மாற்றிக்கொள்வார் என்றே கூறப்படுகிறது.
இளவரசர் சார்லசின் உண்மையான பெயர் சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ் என்பதால், அவர் அரசர் சார்லஸ் என்றோ, அல்லது அரசர் பிலிப் அல்லது அரசர் ஆர்தர் என்றோ அறியப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.