பிரித்தானியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலச் சிலைகள் திருட்டு: இருவர் கைது!
ஐஃபர்ட் மேனரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலச் சிலைகள் திருட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 முக்கியமான வெண்கலச் சிலைகள் திருட்டு
வில்ட்ஷயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஐஃபர்ட் மேனரில்(Iford Manor) இருந்து நான்கு முக்கியமான வெண்கலச் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் ஜூன் 19, 2025 வியாழக்கிழமை இரவு முதல் ஜூன் 20, 2025 வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நிகழ்ந்துள்ளது.
சந்தேக நபர்கள் பிராட்ஃபோர்ட்-ஆன்-அவோன் அருகே உள்ள முதலாம் தரப் பட்டியலிடப்பட்ட தோட்டங்களுக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
திருடப்பட்ட சிலைகளில், 120 ஆண்டுகளுக்கும் மேலாக மேனரின் பள்ளத்தாக்கிற்கு அழகு சேர்த்த, தோட்டங்களின் "இதயமாக" கருதப்பட்ட கேபிடோலைன் ஷீ-வோல்ஃப் வித் ரோமுலஸ் அண்ட் ரெமஸ் சிலையின் ஒரு நகலும் அடங்கும்.

காசாவில் உதவிக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு: இஸ்ரேலிய வீரர்கள் சொன்ன வாக்குமூலம்
இது தவிர, சிமெட்ரிகல் ஃபான்ஸ் (வில்லா டாய் பாபிரை ஃபான்ஸின் பிரதிகள்) ஒரு ஜோடியும், ஆன்டினோஸின் மார்பளவு சிலையும் திருடப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் 20,000 பார்வையாளர்கள் வரும் ஐஃபர்ட் மேனரின் தோட்டங்கள், சமீபத்தில் வரலாற்று வீடுகளின் தோட்ட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
வில்ட்ஷயர் காவல்துறை, 31 வயது மதிக்கத்தக்க ஒருவரும், 39 வயது மதிக்கத்தக்க ஒருவரும் வியாழக்கிழமை மாலை பிரிஸ்டல் பகுதியில் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |