'இனவெறி' நடத்தைக்காக புஜாராவிடம் மன்னிப்பு கோரிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
சோமர்செட் அணியின் பந்து வீச்சளார் ஜாக் ப்ரூக்ஸ் இனவெறி புனைப்பெயரை பயன்படுத்தியதற்காக இந்திய வீரர் புஜாராவிடம் மன்னிப்பு கோரினார்.
அதுமட்டுமின்றி, 2012 ஆம் ஆண்டுக்கு முந்தைய ட்வீட்களில் இனவெறி வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவும் ஜாக் ப்ரூக்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
யார்க்ஷயரில் இருந்தபோது இந்திய பேட்ஸ்மேன் புஜாராவை ‘ஸ்டீவ்’ என்று புனைப்பெயர் சூட்டியதற்கு ஜாக் ப்ரூக்ஸ் மன்னிப்பு கேட்டார்.
2012ல் நான் போட்ட இரண்டு ட்வீட்களில் பயன்படுத்தப்பட்ட மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை ஒப்புக்கொள்கிறேன், அதைப் பயன்படுத்துவதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
இந்த ட்வீட்களைப் பார்த்து யாருடைய மனதாவது புண்படுத்தியிருந்தால் நான் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ப்ரூக்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி புஜாரா அல்லது அவரது குடும்பத்தினருக்கு நான் செய்த குற்றத்திற்காக நான் அவரை அணுகி மன்னிப்புக் கேட்டேன்.
அந்த நேரத்தில் நான் இதை இனவெறி நடத்தையாக அடையாளம் காணவில்லை, ஆனால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை இப்போது என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது என ப்ரூக்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.